கோவையில் 17-வது இன்டெக் தொழிற்கண்காட்சி துவக்கம்

சர்வதேச அளவில் தொழில்துறையினருக்கான இயந்திரம் மற்றும் பொறியியல் உதிரிபாகங்கள் கண்காட்சியான 17-வது இன்டெக் தொழிற்கண்காட்சி கோவையில் துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நவீன இயந்திரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சௌத்ரி துவங்கி வைத்தார். அவருடன், மாநில அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சம்பத், பெஞ்சமின் மற்றும் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷணன் உட்பட மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் ஆணையர்கள், செயலாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



வருகிற 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



குறிப்பாக இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு பதில் பணியாற்றும் வகையிலான ரோபோ, கனரக இயந்தியங்களை தூக்கும் மின் தூக்கி, இயந்திர உதிரி பாகங்களை வடிவமைக்கும் இயந்திரங்கள் மற்றும் உயரமான இடத்தில் பணியாற்றும் வகையிலான நவீன லிஃட் இயந்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.



இதேபோல் நவீன ரக சி.என்.சி.லேத் இயந்திரம், மர இழப்பு நிறுவனங்களுக்கான கருவிகள் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள், லேசர் கட்டிங் இயந்திரங்கள், ஹேண்ட் டூல்ஸ், ஏர் கம்பரசர்கள், பியரிங்ஸ், காஸ்டிங், இன்ஜின், ஜெனரேட்டர்கள், ஆல்டர்னேட்டர்ஸ், பவுண்டரி உபகரணங்கள் உட்பட துறை சார்ந்த பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் எனவும், 600 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வணிகர்களுக்கு, காலை, 10 மணி முதல், பிற்பகல் 3 மணி வரையும், பொதுமக்களுக்கு, 3 மணி முதல், மாலை, 6.30 வரையும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. ஜூன், 4 ஆம் தேதி மாலை, 6 மணிக்கு, கண்காட்சியில் சிறப்பாக உள்ள நிறுவனங்கள் மற்றும் காட்சிப்படுத்தப்படும் பொருட்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...