கோவை வாழும் கலை பவுன்டேஷன் சார்பில் ராஜவாய்க்காலை சுத்தம் செய்யும் பணி துவக்கம்

கோவை வாழும் கலை அமைப்பின் சார்பில் கடந்த 8 நாட்களாக கோவையின் நொய்யல் நதியின் முக்கிய கிளையான ராஜவாய்க்காலை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.



இதுகுறித்து வாழும் கலை அமைப்பின் தமிழ்நாடு அபெக்ஸ் பாடி உறுப்பினர், சந்திர மோகன குமார், மாநில ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர். தாமோதரன் மற்றும் முதுநிலை ஆசிரியர் சசிரேகா வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:-



கோவையை நொய்யல் நதி வளமாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நதியின் மிகவும் முக்கியமான கிளையாக விளங்குவது ராஜவாய்க்கால். இந்த வாய்க்கால் நொய்யல் நதியுடன் ஏழு குளங்களை இணைக்கிறது. கோவை வாழும் கலை பவுன்டேஷன் சார்பில் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வாய்க்காலை சுத்தம் செய்வதன் மூலமாக கோவை நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.

இந்த வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெற்று வருகின்றது. இது வரை சுமார் 12.5 கி.மீ தூரத்தை சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி முடிந்தவுடன் வாய்க்கால் மிகவும் சுத்தமாகக் காட்சி அளிக்கின்றது. இந்தச் சுத்தம் செய்யும் பணி மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த வாய்க்காலை சுற்றியுள்ள 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அந்தப் பகுதி விவசாயிகள், ராஜவாய்க்காலுடன் சித்திரைசாவடி தடுப்பு அணையையும் சுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து வாழும் கலை மையம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலை 8 மணி முதல் சிதிதிரைச்சாவடி தடுப்பனையை சுத்தம் செய்யும் இணையை வேலை நடைபெறும். இந்த சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்களும், அந்தப் பகுதி மக்களும் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இந்தப் பணியில் கோவை மாநகர காவலர்களும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்வில் அனைத்துத் தரப்பு கோவை மக்களுடன் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம். பருவ மழை வருவதற்குள் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பெயர் மற்றும் முகவரியை அருகில் உள்ள வாழும் கலை மையத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான போக்குவரத்தும், மதிய உணவும் அளிக்கப்படும். சொந்தமாக வாகனங்களை வைத்திருபோர், பேரூர் மாதம்பட்டி அருகே உள்ள தடுப்பு அணைக்கு வர வேண்டும். தன்னார்வலர்களும், வழியில் வைக்கப்பட்டுள்ள பிள்க்ஸ் போர்டுகளும் உங்களுக்கு வழிகாட்டும். இதைத் தவிர, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94426 35208 தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...