‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

கோவை ரேடியோ சிட்டி நடத்தும் ஆடியோ பிரிமியர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஞாயிறன்று மாலை 5 மணியளவில் கோவை, புரூக்பீல்ட் வணிகவளாகத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவரவிருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி கலந்து கொண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை தட்டியினை வெளியிட்டார்.



சுந்தர்.சி தயாரிப்பில் “ஹிப் ஹாப் தமிழா” ஆதி கதாநாயகனாக முதல் முறையாக நடித்துள்ள இந்த படத்திற்கு ‘மீசைய முறுக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதோடு அந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் உள்ளிட்டவற்றை எழுதி, இசை அமைத்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆதி. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.



இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமடி, கருத்து, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கல்லூரி கதையாக இருக்கும் என்றும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆதி, அவருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...