உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி புதிய வடிவில் உருவாக்கப்பட்ட குப்பை ஏற்றிச் செல்லும் வாகனம் அறிமுகம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட தாமு நகர் 65-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 'சைப்ரஸ் ஓக்' அபார்ட்மெண்டில் குப்பை ஏற்றிச் செல்லும் பேட்டரி வாகனம் மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை ஏற்றி செல்லும் வாகனத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இது குறித்து கோவை மாவட்ட திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர் சுரேஷ் பண்டாரி கூறுகையில்; கோவையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த குப்பை ஏற்றும் வாகனம் வீடு வீடாக சென்று குப்பையை தரம்பிரித்து ஏற்றி செல்வதற்கு உதவும்.



அதுமட்டுமல்லாமல், புதிதாக பச்சை மற்றும் நீலம் நிறத்தில் மினி டோர் குப்பை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பச்சை நிறம் வாகனம் மக்கும் குப்பைக்காகவும், நீல நிற வாகனம் மக்காத குப்பைக்காவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பச்சை நிறம் வாகனத்தில் குப்பையை கொட்டுவதற்கு எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது குப்பை தொட்டி நிறைந்த பின்னர், அதனை இந்த வாகனத்தின் பின் புறத்தில் உள்ள லாக் உதவியுடன் பொருத்தப்பட்டு தானியங்கி மூலம் வாகனத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இந்த புதிய வடிவில் அமைக்கப்பட்ட குப்பை தொட்டியில் 120 லிட்டர் அளவில் கொள்ளளவு உடையதாகவும். நீலம் நிறத்தில் உள்ள வாகனம் சாதாரணமான முறையில் மக்காத குப்பைகளை கேரிபேக் மூலம் கட்டி எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டம் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றார்.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...