சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை மேற்கொள்ள பெற்றோர்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பஞ்சனப்பட்டி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (47). இவரது மனைவி மங்கையர்கரசி ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பாக்யஸ்ரீ (17) ஓமலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பாலிடெக்னிக் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.



பாக்யஸ்ரீ-க்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிக்க சக்தி சேலத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் நவீன் பாலாஜியிடம் உதவிகோரியுள்ளார். அதைத்தொடர்ந்து, நவீன்பாலாஜி தனக்கு சொந்தமான ஆயுர்வேத அக்குபஞ்சர், சித்தா மற்றும் மூலிகை மருத்துவமனை கோபி கவுந்தப்பாடி அருகே உள்ள எல்லீஸ்பேட்டையில் உள்ளதாகவும், அங்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2ம் தேதியன்று மேற்குறிப்பிட்ட மருத்துவமனையில் பாக்யஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைகள் அளித்து வந்துள்ளனர். அவருடன் சக்தி மற்றும் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர் இருந்துள்ளனர். 

இந்நிலையில், உறவினரின் திருமணத்திற்காக 7ம் தேதியன்று சக்தி மற்றும் மங்கையர்கரசி சென்ற நிலையில், மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் பாக்யஸ்ரீ-யின் உடலை ஓமலூரில் உள்ள அவரது விட்டின் முன்பு வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளது. நேரில் சென்று விசாரித்த போதும் மருத்துவர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று சிறுமி பாக்யஸ்ரீ-யின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 



அப்போது, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மருத்துவமனையின் தவறான சிகிச்சையினாலேயே பாக்யஸ்ரீ உயிரிழந்துவிட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து, அழகான உருவம் பெறலாம் என்ற போலி விளம்பரங்கள் செய்து பெண் உயிரோடு விளையாடுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். 



இந்நிலையில், பணம் கொடுக்காவிட்டால் சடலத்தை தர மாட்டோம் என அரசு மருத்துவமனை ஊழியர்கள் கூறுவதாகக் குற்றச்சாட்டி பாக்யஸ்ரீ-யின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்க முற்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து வைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...