பெண்கள் முன்னேற்றத்திற்கான தெரபத் மஹிலா மண்டல் சார்பில் "ஸ்ரீ உட்சவ் 2017"


சமூகத்தில் மாற்றம் உருவாக்குவதற்கான தீர்வை வழங்குவதில் இலாப நோக்கமற்ற நிறுவனமாக தெரபத் மஹிலா மண்டல் செயல்படுகிறது. இதில் ஸ்வஸ்த் பரிவார் ஸ்வஸ்த் சமாஜ், கனியா சூரகாஷா யோஜனா, மருத்துவ முகாம்கள், கிராமப்புறங்களில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த அமைப்பு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது.



இந்த ஆண்டு டி.எம்.எம், ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ தொடங்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் ஏ.கே.எஸ். நகர், தெரபந்த் ஜெயின் பானில் ஜூன் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு "ஸ்ரீ உட்சவ் 2017" நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், 55 கடைகளில் காலணிகள், துணிகள், குழந்தை தயாரிப்புகள், சுற்றுச்சூழல் பசுமைப் பொருட்கள் மற்றும் இன்னும் பலவகையான கைவினைப்பொருட்கள் என கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இது குறித்து டிஎம்எம் செயலாளர் மோனிகா லுமியா பேசுகையில்; "நாங்கள் டிஎம்எம்லிருந்து பல்வேறு சமூகநலத் திட்டங்களை செய்து வருகிறோம், நாங்கள் முதன் முறையாக ஸ்ரீ உட்சவ் 2017 எக்ஸ்போவை ஏற்பாடு செய்திருக்கிறோம், இந்த வகையான  எக்ஸ்போ பெண்கள் தொழில்முயற்சியாளர்களுக்கான புதிய தளத்தை வழங்க உதவுகிறது. கொங்கு பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தொழில் முனைவோர் உள்ளனர். ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ எங்களுக்கு தேவையான நிதி திரட்ட உதவும் என நாங்கள் நம்புகிறோம். என்றார்.

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...