நகைக்கடைகளில் நகை சீட்டு திட்டங்களை முறைப்படுத்தக் கோரி அகில பாரத இந்து மகா சபா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்காக நகை சீட்டு என்ற சிறு சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கடைக்கும் செய்கூலி, சேதாரம் வேறுபடுவதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவையில் பல நகைக்கடைகள் மற்றும் வடிவமைப்பு தொழிலகங்கள் செயல்பட்டு வருகிறது. பல சிறு சேமிப்பு திட்டங்களை அறிவிக்கும் நகைக்கடைகளில் மக்கள் தங்களால் முடிந்த மாதாந்திர தவணை தொகையை செலுத்தி வருகின்றனர். சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தவணை தொகையை செலுத்த முடியாத நிர்பந்தம் ஏற்டுகிறது.

இச்சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நகைக்கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கட்டிய தவணை தொகையினை பல காரணங்கள் கூறி திருப்பி கொடுக்க மறுக்கின்றனர். மேலும், செய்கூலி, சேதாரம் என மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கின்றனர்.

தங்க நகைகள் பல ஆண்டுகளாக மக்களின் பாரம்பரிய காலாச்சார வாழ்வியலோடு சேர்ந்தே வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக நூதனமான முறையில் மக்களின் பணத்தை சேமிப்பு என்ற முறையில் கொள்ளையடிக்கும் நகைக்கடைகளை கண்காணிக்க ஆய்வுக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நகை விற்பனையை முறைப்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...