தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த சந்திராபுரம் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டில் இடம் வழங்கப்படுவதில்லை எனவும், தங்களுக்கு என தனியே சுடுகாட்டிற்கான இடம் வழங்கக் கோரியும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



சந்திராபுரம் காலனியில் 40 குடும்பங்களாக 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கான சுடுகாடு மேற்படி ஊரில் ஒரு காட்டில் தான் இருந்தது. எங்கள் சமூகத்தில் இறப்பவர்களை அங்குதான் புதைத்து வந்தோம். அந்த இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா பூமி என்கிற விபரம் எங்களுக்கு இப்போது தான் தெரிய வந்தது. அதனால் நிலத்தின் உரிமையாளர் இனிமேல் அந்தக்காட்டினை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த மே மாதம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் சுடுகாட்டிற்கு கொண்டு போன போது மேற்படி உரிமையாளர் தடுத்து விட்டார். அதனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் எங்கள் பகுதிக்கு அருகில் (க.ச.323) என்ற இடத்தில் உள்ள நீர்வழிப் பாதையில் சடலத்தை புதைத்தொம். பல்வேறு சமூகத்தவர்களும் அங்குதான் புதைத்து வருகிறார்கள்.

அதன் பிறகு அப்பகுதி ஆதிக்கசாதியினர் சிலர் வந்து இது எங்கள் சுடுகாட்டு இடம், இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பிணம் புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மே 25ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு சூலூர் வட்டாட்சியர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்பேரில் ஆதிக்கசாதியினரையும், எங்களையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, ஆதிக்கசாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். மீறி அங்கு புதைத்தால் சமூக பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் பேசினர். இதனால், வட்டாட்சியர் அந்த மனுவை மேல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டார். 



எங்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் இடம் கொடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...