தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த சந்திராபுரம் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டில் இடம் வழங்கப்படுவதில்லை எனவும், தங்களுக்கு என தனியே சுடுகாட்டிற்கான இடம் வழங்கக் கோரியும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



சந்திராபுரம் காலனியில் 40 குடும்பங்களாக 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கான சுடுகாடு மேற்படி ஊரில் ஒரு காட்டில் தான் இருந்தது. எங்கள் சமூகத்தில் இறப்பவர்களை அங்குதான் புதைத்து வந்தோம். அந்த இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா பூமி என்கிற விபரம் எங்களுக்கு இப்போது தான் தெரிய வந்தது. அதனால் நிலத்தின் உரிமையாளர் இனிமேல் அந்தக்காட்டினை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த மே மாதம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் சுடுகாட்டிற்கு கொண்டு போன போது மேற்படி உரிமையாளர் தடுத்து விட்டார். அதனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் எங்கள் பகுதிக்கு அருகில் (க.ச.323) என்ற இடத்தில் உள்ள நீர்வழிப் பாதையில் சடலத்தை புதைத்தொம். பல்வேறு சமூகத்தவர்களும் அங்குதான் புதைத்து வருகிறார்கள்.

அதன் பிறகு அப்பகுதி ஆதிக்கசாதியினர் சிலர் வந்து இது எங்கள் சுடுகாட்டு இடம், இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பிணம் புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மே 25ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு சூலூர் வட்டாட்சியர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதன்பேரில் ஆதிக்கசாதியினரையும், எங்களையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, ஆதிக்கசாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். மீறி அங்கு புதைத்தால் சமூக பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கும் வகையில் பேசினர். இதனால், வட்டாட்சியர் அந்த மனுவை மேல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டார். 



எங்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் இடம் கொடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...