காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன், மனைவி புகார்

புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பட்டான், இவரது மனைவி கமலா. இவர்களுக்கு தங்கராஜ், செந்தில்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்கராஜ்-க்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, தங்கராஜ்-க்கும், அவருடன் பணியாற்றி வந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மாயமாகிய நிலையில், தங்கராஜை தேடிவரும் அன்னூர் போலீசார் பட்டானையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாக தாக்குவதாக குற்றம்சாட்டி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 



இது குறித்து பட்டான் கூறியதாவது:- எனது மகன் மாயமானது முதல் தினமும் நள்ளிரவில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் இருக்கும் என்னையும், எனது இளைய மகன் செந்தில்குமாரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.

போலீசார் தாக்கியதில் எனது இடது கண்ணில் குறைபாடு ஏற்பட்டுவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எனது இளைய மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இதுவரை விடுவிக்கவில்லை. தங்கராஜ் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திவருகின்றனர். தங்கராஜ் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது என்று கூறினாலும், அதனை போலீசார் நம்பாமல், எனது அண்ணன் மகன் உட்பட அனைவரையும் விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.



இந்த பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்".  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...