செய்தியாளர்கள் தங்கள் சித்தாந்தத்தை வெளிப்படுத்த வேண்டாம்: பயிற்சிப்பட்டறையில் பத்திரிகையாளர் வேலுச்சாமி பேச்சு



கோவை பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7-வது பயிற்சிப்பட்டறை இன்று காலை கோவை பிரஸ் க்ளப் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், தினமலர் நாளிதழின் செய்தியாளர் ரா.வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அரசியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 



ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க எவ்வித பாதுகாப்பு சட்டமும் நம் நாட்டில் இல்லை. தற்போது, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன.

ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பதற்கு முன் பத்திரிகையாளர்கள் நாட்டு நடப்பு குறித்த புதிய செய்திகளை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் சில சங்கடமான சூழல்களை சந்திக்க நேரலாம்.



இன்றய காலகட்டத்தில் கேள்வி என்பது பதிலை பெறுவதற்காக கேட்கப்படுவதில்லை. மாறாக, ஒருவரை சிக்கலில் சிக்க வைப்பதற்காகவே கேட்கப்படுகிறது, இளம் பத்திரிகையாளர்கள் இந்த முறையை கைவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை முழுமையாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதனால் ஒரு கேள்வி கேட்டபின்னர், அதற்கான முழுமையான பதிலை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு பின்னரே அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். அனைவருமே ஏதாவது ஒரு சித்தாந்தத்தை சார்ந்தவர்களாக அல்லது ஆதரிப்பவர்களாக இருப்போம். நடுநிலையான பத்திரிகையாளராக பணிபுரிய வேண்டுமென்றால், நமது சித்தாந்தத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. அப்படி தெரிவித்தால், இருவித இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். ஒன்று, நமது சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் கொண்ட அரசியல் பிரமுகர்கள், நம்மிடம் நெருக்கமாக பழகமாட்டார்கள். அதனால் நம்மை நம்பி உள்ள விஷயங்களை தெரிவிக்காமல் தவிர்த்துவிடுவார்கள். இரண்டாவது இழப்பு, நாம் எதிர்சித்தாந்தம் கொண்டவரைப் பற்றி உண்மையான செய்தி எழுதினால் கூட, அதை நம் கொள்கையை காரணம் காட்டி உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அதனால் அனைத்து தரப்பினருடனும் நட்புடன் பழகி செய்திக்கான சோர்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியின் முடிவில் இளம் பத்திரிகையாளர்கள் சார்பில் மூத்த பத்திரிகையாளர் வேலுச்சாமிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...