கேரள தேயிலை தோட்ட தொழிலாலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி வால்பாறை தோட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

தொழிற்சங்களுடான பேச்சு வார்த்தையில் கேரள மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 313 ரூபாய் வழங்கபட்டு வருகிறது. அனால், வால்பாறையில் உள்ள தனியார் நிறுவன தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 234 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு வருகிறது.



ஒரே நிறுவனத்தில் ஒரே தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு வகையான மாறுபட்ட சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, "கடந்த 2016-ம் ஆண்டு வரை நாங்கள் சார்ந்திருந்த தொழிற்சங்களுக்கு உறுப்பினர் சந்தா செலுத்தி வந்தோம். 2017 ஜனவரி 1 முதல் சந்தா செலுத்தாமல் தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து விலகி விட்டோம்.

தற்போது நாங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத போது தங்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தங்களில் கையொய்பமிட முயன்று வருகின்றனர். தினக்கூலியாக டி.ஏ-வுடன் சேர்த்து 290 ரூபாயை ஏற்று வேலை செய்ய உள்ளதாக பொய்யான அறிவிப்பை வெளியிட உள்ளனர். எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்கள் அல்லாத தங்களை கலந்து ஆலோசிக்காமல் சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டால் அது தங்களை கட்டுப்படுத்தாது. 



எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் எஸ்டேட்டின் தொழிலாளர் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக வழங்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...