தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்க நவீன சிசிடிவி காமிராக்கள்: கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தகவல்

காவல்துறையால் தேடப்படும் நபர்களை கண்டுபிடிப்பதற்கும், திருடு போன வாகனங்களை அடையாளம் கண்டு மீட்கும் வகையில் கோவை மாநகரில் நவீன சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை (போக்குவரத்து) துணை ஆணையர் துரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாநகரில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் தேடிவரும் குற்றவாளிகளையும், திருடப்பட்ட வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் நவீன சிசிடிவி காமிராக்கள் கோவையில் 15 இடங்களில் பொருத்தப்பட உள்ளது.

இந்த காமிரா 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபரின் புகைப்படம் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் காமிரா பொருத்தப்பட்டிருக்கும் வழியாக செல்லும் போது, அவரின் முகம் பதிவாவதோடு, அவரின் புகைப்படத்தையும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும்.

மேலும், நகரில் திருப்பட்ட வாகனங்களின் பதிவெண்களை உள்ளீடு செய்து வைத்திருப்பதன் மூலம், அந்த வாகனம் காமிராவில் பதிவானால், உடனடியாக அந்த தகவல் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால், குற்றவாளிகளை மிக எளிதாக பிடிக்க முடியும்.

முதற்கட்டமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ‘செக் போஸ்ட்’ல்  அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த நவீன காமிரா பொருத்தப்பட உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...