தடாகம் சாலையில் அதிகளவில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் தடாகம் அருகே யானைகள் கொண்ட கூட்டம் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று இரவு தடாகம் அருகே 15-க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில் முகாமிட்டன. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறி 15 யானைகள் கொண்ட கூட்டம் தடாகம் பகுதிக்குள் நேற்று மாலை 8 மணி அளவில் நுழைந்தது. தடாகத்தில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்த தொட்டிகளில் அந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்தது.

பின்னர் தடாகம் சாலையின் நடுவே மெதுவாக நடந்து சென்ற யானைகளால், ஆனைகட்டி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த காட்டு யானைக் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

ஒரே நேரந்தில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் தடாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...