ஒவ்வொரு ஓவியத்திலும் ஒரு தகவல்சொல்லும் கோவை வனக் கல்லூரியின் சுற்றுச்சுவர்

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் அமைந்துள்ளது வனக்கல்லூரி. அன்றாடம் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பயணிக்கும் இந்த சாலையில் வனக்கல்லூரியின் சுற்றுச்சுவர் அசுத்தம் நிறைந்ததாகக் காணப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) ரோட்டரி கிளப் மாணவர்கள் இணைந்து ஜிசிடி கல்லூரி முதல் வனக்கல்லூரி வரையிலான சுற்றுச்சுவற்றில் சமூக விழிப்புணர்வுமிக்க ஓவியங்களை வரைய முன்வந்தனர்.



அதன்படி, இத்திட்டத்திற்கு ரவுண்டு டேபில் 31 அமைப்பின் நிதி உதவியுடன் இக்கல்லூரியின் சுற்றுச்சுவற்றில் ஓவியங்கள் வரையும் பணி துவங்கப்பட்டு தற்போது முடியும் தருவாயினை எட்டியுள்ளது.



இதுகுறித்து ஜிசிடி கல்லூரி மாணவரும், அக்கல்லூரி ரோட்டரி கிளப் தலைவருமாகிய அனக்ஸ் கூறுகையில், பெரும்பாலான மக்கள் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையினை பயன்படுத்த மறுத்து வருகின்றனர். காரணம், அவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதே ஆகும். அதுபோன்றுள்ள ஜிசிடி முதல் வனக்கல்லூரி வரையிலான நடைபாதை அருகே உள்ள சுற்றுசுவற்றில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டோம்.



இதில், நமது கலாச்சாரம், கலை, பெண்கள் முன்னேற்றம், வனவிலங்குகள், இரத்த தானம், மாசுபாடுகள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.



இதனைக்காணும் போது, அவ்வழியாக செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைவர். நடைபாதையும் சுகாதாரமாக இருக்கும். இதற்கான அனைத்து உதவிகளையும் ரவுண்டு டேபில் 31 அமைப்பு வழங்கி வருகிறது.



பொதுமக்களும், இந்த சுவற்றில் ஓவியங்கள் வரைய விரும்பினால் அதற்கான உபகரணங்கள் அனைத்தும் நாங்கள் வழங்குகிறோம். உங்களது ஓவியங்களை வரைந்து சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள முன் வாருங்கள்' என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...