கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலைமறியல்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்குவதில் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி இன்று பெற்றோர்கள், மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்விகளானது மாறுபட்டு மருத்துவ படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கிவிட்டு மீதமுள்ளவர்களை நிர்வாகத்தினர் அலைக்கழித்துள்ளனர். 



இதனைத்தொடர்ந்து, இன்று மருத்துவக் கல்லூரியில் சிலருக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு பிறரை நாளை வரும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், மாணவர்களும் அவினாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.



முன்னதாக, இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில், ஏற்கனவே மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்கள் பெரிதும் மனவுளைச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விண்ணப்பங்கள் வழங்குவதில் முறையாக செயல்படுவதில்லை. இவ்வாறாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...