ஓசை அமைப்பு சார்பில் 38 பயிற்சி வனவர்களுக்கு கோவையில் பயிற்சி முகாம்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை அமைப்பானது சுற்றுச்சூழல் குறித்தான பல்வேறு பிரச்சனைகளில் பங்கேற்று சீரமைத்து வருகிறது. இந்நிலையில், ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது தலைமையில் இந்திய அளவில் இருந்து கோவை வந்த 38 பயிற்சி வனவர்களுக்கு மரம் மறுநடவு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.



முன்னதாக, கோவை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, சக்தி சாலை விரிவாக்கப்பணிக்காக மறுநடவு செய்யப்படவிருந்த மரங்கள் பார்வையிடப்பட்டன. அப்போது, இன்று வேப்ப மரம் ஒன்று மறு நடவு செய்யப்பட்டு குமரகுரு கல்லூரியில் நடப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் 32 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று துணை வன பாதுகாவலர்கள் தலைமையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை வன பாதுகாவலர் விஜய் நமது சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

ஓசை அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு எங்களது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒரு மரத்தினை மறுநடவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதனை இவர்கள் மறுநடவு செய்வது மட்டுமின்றி அந்த மரம் மீண்டும் உயிர்பெற்று வளர்வதிலும் அக்கரைகொண்டு செயல்படுகின்றனர்.

தற்போது, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 38 பேரில் 31 பேர் மகாராஷ்டிரா, 5 பேர் குஜராத், 2 பேர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இப்பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் பயின்றுள்ளனர்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...