தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விறப்பனை படு ஜோர்: முறையான நடவடிக்கை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்களான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகை பொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அவ்வப்போது, இவ்வகை போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், குட்கா, பான்மசாலா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வகை போதை பொருட்கள் முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் என்னுடன் வந்தால் அவற்றை விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காட்டுவேன்' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...