மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் மக்கள் தரையில் அமர வேண்டிய அவலம்

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து வருகின்றனர். இதனால், திங்கட்கிழமைகளில் எப்போதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பகவே காணப்படுகிறது.



பாலூட்டும் அறை:-

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பச்சிளங்குழந்தைகளுடன் மனு அளிக்கவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்குக் கூட ஒதுக்குப்புறமாக ஓர் இடம் இல்லாமல் தவித்து வருவதாக சமீபத்தில் 'சிம்ப்ளிசிட்டி' -யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. 



புதிய ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டும், இதுவரை பாலூட்டும் அறை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் எதுவும் இல்லாமல் தரையில் வெகு நேரம் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது.



தண்ணீர் வசதி, வீடு, பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி வருவோரை இப்படி தரையில் அமர்த்தி காத்திருக்கச்செய்வது முறையோ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...