மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வரும் மக்கள் தரையில் அமர வேண்டிய அவலம்

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து வருகின்றனர். இதனால், திங்கட்கிழமைகளில் எப்போதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பகவே காணப்படுகிறது.



பாலூட்டும் அறை:-

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பச்சிளங்குழந்தைகளுடன் மனு அளிக்கவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்குக் கூட ஒதுக்குப்புறமாக ஓர் இடம் இல்லாமல் தவித்து வருவதாக சமீபத்தில் 'சிம்ப்ளிசிட்டி' -யில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. 



புதிய ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டும், இதுவரை பாலூட்டும் அறை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

இந்த நிலையில், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் எதுவும் இல்லாமல் தரையில் வெகு நேரம் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது.



தண்ணீர் வசதி, வீடு, பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி வருவோரை இப்படி தரையில் அமர்த்தி காத்திருக்கச்செய்வது முறையோ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...