கோவை ரயில் நிலையத்தில் முதல் முறையாக செயலி (App) மூலமாக நான்கு சக்கர வாகன சேவைகள் அறிமுகம்

கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு நேற்றைய முன்தினம் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் ஒருபகுதியாக கோவை ரயில் நிலையத்தில் முதல் முறையாக செயலி (App) மூலமாக நான்கு சக்கர வாகன சேவைகளை ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இச்சேவை மூலம் ஜூலை 1ம் தேதி முதல் பயணிகள் நான்கு சக்கர வாகன சேவையை கோவை ரயில் நிலையத்தில் உள்ள கியாஸ்க்குகளில் இருந்தே பதிவு செய்து கொள்ளலாம்.



பயணிகளுக்கு சேவை வழங்க தெற்கு ரயில்வே தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அதற்கு உரிய முன்னோடி திட்டமாக கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலமாக வாகன சேவைகள் அளிக்க இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னனுபவமிக்க OLA, UBER, FAST TRACK ஆகியோருடன் இணைந்து இந்த சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலி மூலமாக வாகன சேவைக்குரிய சுமார் 20 கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக கோவை ரயில்நிலைய சந்திப்பின் மைய நுழைவு வாயிலில் சுமார் 339 சதுர மீட்டர் பகுதியை ரயில்வேத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.



இந்த சேவையை குறித்து, UBER தெற்கு கார் நிறுவனத்தின் பொது மேலாளர் கிரிஸ்டின் ஃப்ரீஸ் கூறுகையில்; கோவையில் உபரின் இரண்டு ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தெற்கு ராயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஏற்கனவே, உள்ள பொது மக்களுக்கான போக்குவரத்துக்கு கட்டமைப்பு வசதிகளுடன், முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பில் உள்ள இடைவெளியை நிறைவு செய்வதன் மூலம், பணிகள் அணுக்கத்தை எளிதாக்குகிறோம்.

மேலும், ராயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள தமிழகத்தில் முதல் நகரம் கோவையாகும். நகரத்திற்குள் பொது மக்கள் எளிதில் பயணிக்க உதவும் வகையில் எங்களது முனைவுகளை மேலும் வலுப்படுத்த உறுதியாக உள்ளோம். ஸ்மார்ட் ஃபோன் அல்லது இணைய வசதி இல்லாவிட்டாலும், எந்தக் கவலையும் இன்றிப் பயணிகள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல எங்கள் பிரதிநிதிகள் உதவுவார்கள்" என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...