தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் வரும் ஜூலை 6-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட அனைத்து கட்டுமான அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று கோவை கேரளா கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு கூறியதாவது:-

அரசு மணல் குவாரிகளில் போதிய அளவு மணல் கிடைப்பதில்லை. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. மணல் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மற்றும் எம்.சாண்ட் மணல் விலையும் அதிகரித்து உள்ளது. 

கோவை மாவட்டத்தில் கட்டுமான பணிக்கு நாள் ஒன்றுக்கு 1000 லோடு மணல் கிடைக்கப் பெற்ற நிலையில் தற்போது 150 முதல் 200 லோடு மணல் மட்டுமே கிடைப்பதால் கட்டுமான தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எம்.சாண்ட் மணல் முழுமையாக கிடைக்க மூன்று, நான்கு மாதங்கள் கடக்கின்றன. குவாரிகளில் எம்.சாண்ட் மணல் கிடைக்க மாநில அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதால் கட்டுமான தொழிலில் நேரிடையாக ஈடுபட்டுள்ள 4 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து பாதிப்படைந்துள்ளனர்.

மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை நீக்குதல், பத்திரப்பதிவு கட்டணத்தை குறைத்தல் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து கட்டுமான அமைப்புகளின் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. 6ம் தேதி மாலை கோவையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வஉசி மைதானம் வரை பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம்.

இவ்வாறு கோவை மாவட்ட பில்டர்ஸ் ஆசோசியன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ராஜவேலு தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...