கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யக்கூடாது- ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்


கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் ஜலேந்தரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரையில் அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். ஆனால், கோவை மாநகராட்சி சார்பில் அந்த நபரின் குடும்பத்திற்கு உக்கடம் பகுதியில் தொழில் துவங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காத அரசு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கும் எவ்வித நிவாரணமும் வழங்க கூடாது'. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...