அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்- விஎச்பி செயலாளர் கைது

கோவை காந்திபுரத்தில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதியன்று அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். அது சிபிஎம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார் மீதும், கட்டிட ஜன்னல் மிதும் விழுந்து வெடித்தது. இதில், பெரிய அளவில் சேதம் இல்லை என்ற போதிலும் சிபிஎம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் தொலைபேசி உரையாடல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படை பிரிவினர் செவ்வாயன்று (நேற்று) மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் யோகா பயிற்றுனராக பணியாற்றி வரும் இவர், லண்டனில் மென் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, விசாரணை மேற்கொள்கையில், அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத நிலையில், சிபிஎம் அலுவலகம் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி பழிதீர்க்க முடிவு செய்து ஒரு குழுவாக இயக்கியிருப்பதும், அந்த குழுவின் செயல்திட்டத்தின் படியே சிபிஎம் அலுவலம் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய சரவணக்குமாரை செவ்வாயன்று இரவே நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் தொடர்ந்து, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...