கிராமபுர மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் - உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கோவை அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

கிராமபுர மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு கோவை அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. 

கிராமபுர மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டினை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமபுர மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். மற்றும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து  தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கோவை மாவட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவ சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், மருத்துவர்களுக்கு பெரிதும் உதவிய தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்​.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...