கோவை மாநகராட்சி பள்ளியில் முதல்முறையாக சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



கோவையில் முதல்முறையாக மாநகராட்சி பள்ளியில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்க, 2013-ம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம், 4.5 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியிலுள்ள கால்பந்து மைதானத்தை மாற்றி அதற்கு பதிலாக ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது.

2015ல் துவங்கிய இந்த பணி, தற்போது சுறுசுறுப்பாக நடக்கிறது. இதற்காக, 'ஆஸ்ட்ரோ டர்ப்' எனப்படும் செயற்கை புல் மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது. சர்வதேச தர ஹாக்கி விளையாட்டுக்கு 91.4 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலமான இடம் தேவை. ஆனால், தற்போது 100 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலமாக போதுமான இடம் உள்ளதால் சுற்றிலும் காலரி அமைக்கவும் வசதி உள்ளது. இப்பணியை, தற்போது தில்லி சின்காட்ஸ் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். 



அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இதுகுறித்து கூறுகையில், ''6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படுகிறது. மைதானத்தை சுற்றிலும் நீர் வடிகால் அமைக்கப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் இந்த பணியும் முடிந்து விடும். இதற்கு பின், மைதானத்தில் பாலியுரேதீன் என்ற கலவை ஊற்றப்படும். ஏற்கனவே தயார் நிலையில் உள்ள 'ஆஸ்ட்ரோ டர்ப்' மைதானம் முழுவதும் விரிக்கப்படும். அடுத்த சில வாரங்களில் மைதான பணி சிறப்பாக முடியும்,'' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...