சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலி: பொது இடத்தில் மது அருந்திய நான்கு பேர் மீது வழக்கு

நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கோவையின் முக்கிய இடங்களில் இருந்த பல்வேறு டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 



இதனால், ஊருக்கு நடுவே இருக்கும் டாஸ்மாக் பார்களுக்கு படையெடுத்த மது பிரியர்கள் பொது இடங்களிலேயே வைத்து மதுவை அருந்துவதும் பின்னர் காலி பாட்டில்களை சாலைகளில் எரிவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் இருக்கும் டாஸ்மாக் பார் முன்பு உள்ள காலி மைதானத்திலும், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் பலர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவதோடு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வீசிச்செல்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சிங்காநல்லூர் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது ஜி.வி.ரெசிடென்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமர்ந்து மது அருந்தி வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (36), சிவக்குமார் (37), சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (40) மற்றும் சுரேஷ் (35) ஆகிய நான்கு பேர் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...