ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் திருடுவதை தடுக்காவிட்டால் குடும்ப அட்டை திருப்பி அளிக்கப்படும்- ஆட்சியரிடம் மக்கள் புகார்


பணப்பாளையம்புதூரில் ஆழ் குழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டையை திருப்பி அளிக்க போவதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பணப்பாளையம்புதூர், செம்மனாம்பாளையம் மற்றும் அருகில் வசித்து வரும் 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளியங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறோம். அத்திகடவு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரை இந்த பகுதி மக்கள் உபயோகித்து வந்தோம். தற்போது தாங்கள் வசித்து வரும் பகுதியின் அருகே சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருவதால் மேற்குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தங்களது குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.



இதேபோல் தண்ணீர் திருட்டால் விவசாயம் அழிந்து வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாகக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...