கோவை பொள்ளாச்சி சாலையில் மீண்டும் துவங்கியது பேருந்துகளுக்கிடையேயான போட்டி

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடந்துtU;k சூழலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அசுர வேகத்தில் போட்டி போட்டுக்கொண்டு செல்வதால் சாலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு பொள்ளாச்சி சாலையில் சென்றது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து போக்குவரத்து துறையினர் சம்பந்தப்பட்ட அந்த இரு பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி உதவி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேகமாக சென்ற ஏழு பேருந்துகளை பிடித்து அபராதம் விதித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஓரிரு நாட்கள் மட்டும் குறைவான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல் மீண்டும் தற்போது உடுமலை, பழனி செல்லும் பேருந்துகள் கிணத்துக்கடவு பகுதியை தாண்டியவுடன் அதிவேகமாக இயக்குவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் பேருந்தில் பயணிக்கும் மக்களின் உயிர்க்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே வேகமாக செல்லும் பேருந்துகள் மீது அரசியல் தலையீடுகளை தவிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்திரவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...