தென் இந்திய மக்களின் இட்லி, தோசையை மறக்கடிக்கும் ஜிஎஸ்டி வரி- சிஐஐ கூட்டத்தில் கிரைன்டர் உற்பத்தியாளர்கள் வேதனை

தென் இந்திய மக்களின் பிரதான காலை உணவாக இடம்பெருவது இட்லியும், தோசையுமே. ஆனால் தற்போது அந்த உணவிற்கு மிகப்பெரிய அழிவு வந்துள்ளது. காரணம் கிரைன்டர் மீதான 17 முதல் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி உயர்வு. 



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் சிஐஐ சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பங்கேற்று ஜிஎஸ்டி மீதான மக்களின் புரிதல் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரைன்டர் உற்பத்தியாளர்கள், ஜிஎஸ்டி உயர்வால் மக்களும், உற்பத்தியாளர்களும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.



இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற உற்பத்தியாளர் குறைதீர் கூட்டத்தில், கிரைன்டர் உற்பத்தி மீது 17 முதல் 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவிகிதம் மாநில அரசிற்கும், 12.12 சதவிகிதம் மத்திய அரசிற்கும் செல்கிறது என கூட்டத்தில் பங்கேற்ற உற்பத்தியாளர் அசோசியேஷன் உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், கோவையில் ஏராளமான கிரைன்டர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் கோவையிலேயே கிரைன்டர் உற்பத்தி அதிகளவில்  உள்ளது. இந்நிலையில், இந்த வரி உயர்வானது உற்பத்தி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. எனவே, 17 முதல் 28 சதவிகித வரியினை 12 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி என்பது உற்பத்தியினை மட்டுமே சார்ந்தது அல்ல. கல்வி, மருத்துவம் என அனைத்தைம் மேம்படுத்தும் நோக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. 



மேலும், பிற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் ஜிஎஸ்டி வரியானது குறைவானதே என அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...