தென் இந்திய மக்களின் இட்லி, தோசையை மறக்கடிக்கும் ஜிஎஸ்டி வரி- சிஐஐ கூட்டத்தில் கிரைன்டர் உற்பத்தியாளர்கள் வேதனை

தென் இந்திய மக்களின் பிரதான காலை உணவாக இடம்பெருவது இட்லியும், தோசையுமே. ஆனால் தற்போது அந்த உணவிற்கு மிகப்பெரிய அழிவு வந்துள்ளது. காரணம் கிரைன்டர் மீதான 17 முதல் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி உயர்வு. 



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் சிஐஐ சார்பில் உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பங்கேற்று ஜிஎஸ்டி மீதான மக்களின் புரிதல் குறித்து விளக்கவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிரைன்டர் உற்பத்தியாளர்கள், ஜிஎஸ்டி உயர்வால் மக்களும், உற்பத்தியாளர்களும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினர்.



இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற உற்பத்தியாளர் குறைதீர் கூட்டத்தில், கிரைன்டர் உற்பத்தி மீது 17 முதல் 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவிகிதம் மாநில அரசிற்கும், 12.12 சதவிகிதம் மத்திய அரசிற்கும் செல்கிறது என கூட்டத்தில் பங்கேற்ற உற்பத்தியாளர் அசோசியேஷன் உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், கோவையில் ஏராளமான கிரைன்டர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் கோவையிலேயே கிரைன்டர் உற்பத்தி அதிகளவில்  உள்ளது. இந்நிலையில், இந்த வரி உயர்வானது உற்பத்தி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது. எனவே, 17 முதல் 28 சதவிகித வரியினை 12 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும், உற்பத்தியாளர்கள், தங்களின் உற்பத்தி தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் வரும் ஆகஸ்ட் 4ம் தேதியன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி என்பது உற்பத்தியினை மட்டுமே சார்ந்தது அல்ல. கல்வி, மருத்துவம் என அனைத்தைம் மேம்படுத்தும் நோக்கில் உயர்த்தப்பட்டுள்ளது. 



மேலும், பிற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் ஜிஎஸ்டி வரியானது குறைவானதே என அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...