மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை: உழவே தலை கருத்தரங்கில் கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் 'அக்ரி இன்டெக் 2017' என்ற வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் பகுதியாக 'உழவே தலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் கொடிசியா ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில் பாரதிய வித்யா பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இயற்கை விவசாய அறிஞர்கள் 16 பேர் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்தினர். 



முன்னதாக கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் நாம் நிறைய சாதித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அனைத்து வளங்களும் நம்மிடம் இருந்தும் இந்த தொய்வுக்கு காரணம் மக்களின் பங்களிப்பு இல்லாமல் போனதே காரணம். இவ்வளவு பெரிய தேசத்தை ஒரு அரசியல் கட்சியோ அல்லது முதல் அமைச்சரோ மட்டும் கவனித்துக் கொள்ள முடியாது. 

மக்கள் ஆக்கப்பூர்வமாக செயல் பட்டு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை சதவிகிதம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் மீதான மக்களின் அலட்சியம் மற்றும் அறியாமை நீங்கும் போது தான் பின்னடைவு நீங்கும். உழவே தலை என்ற இந்த கருத்தரங்கிற்கு அதிகமான இளைஞர்கள் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிரச்சனைகள் மீது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது. ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை. இயற்கையை கெடுப்பது, விவசாயத்தை புறக்கணிப்பது விவசாயத்தின் மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவைகள் தவிர்க்கப்பட்டு, இளைஞர்களை விவசாயத்திற்குள் புகுத்திட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். 



இக்கருத்தரங்கில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன், சித்த மருத்துவர் சிவராம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...