'அக்ரி இன்டெக்ஸ் - 2017' வேளாண் கண்காட்சியில் புல்தரையை அழகுபடுத்தும் ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் அறிமுகம்

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் 'அக்ரி இண்டெக் 2017' என்ற விவசாய கண்காட்சியில் புல்தரையை அழகுபடுத்தும் ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கம் எனும், கொடிசியா சார்பில், 'அக்ரி இன்டெக்ஸ் - 2017' எனும் விவசாயக் கண்காட்சி, கோவை, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை  துவங்கியது. கண்காட்சியை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி துவக்கி வைத்தார். இக்கண்காட்சி காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. விடுமுறை நாளன இன்று பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. இக்கண்காட்சியில், இந்தியா மட்டுமின்றி, இத்தாலி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட, 12 நாடுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் அரங்குகள் அமைந்துள்ளன. இதில், வேளாண் இயந்திரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் என, பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இக்கண்காட்சியில் பல்வேறு கருவிகள் மற்றும் இயற்கை உரங்கள் போன்றவற்ற விவசாயிகளுக்கு சம்மந்தமானவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார்:



இந்தியாவில் முதல்முறையாக ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் அறிமுகபடுத்தப்படவுள்ளது. இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் வீடுகளில் வெளிப்புறத்தில் உள்ள கார்டனில் அதிக அளவில் வளர்ந்த புல்களை இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் மூலம் வெட்டிவேடுக்கப்படுகிறது. 2 செ.மீ முதல் 3செ.மீ வரை புல்தரையினை அழகுபடுத்த இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் பயன்படுகிறது. 45 டிகிரி வரையிலான மேடுகளில் இந்த ஆட்டோமேடிக் ரோபோர்ட் சென்சார் ஏறும் வகையிலும், தானியங்கி மூலமாக ரீசார்ஜ் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.

செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர்:







தொலைவில் உள்ள மின் மோட்டரை இருக்கின்ற இடத்திலிருந்தே செல்போன் மூலம் ஆன்/ ஆப் செய்திடும் கருவியாக செல்போன் மோட்டார் ஸ்டார்ட்டர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் சிறப்பம்சமாக மிஸ்ட் கால் மற்றும் குறுந்தகவல் மூலமாகவும், மோட்டரை ஆன்/ ஆப்  செய்து கொள்ளலாம். இதனால் உயர் மற்றும் குறைந்த மின் அழுத்தத்தில் இருந்து மோட்டார் பாதுகாக்கபடுகிறது. தண்ணீர் தீர்ந்தவுடன் மோட்டார் தானாகவே ஆப் செய்யப்படுகிறது. மின்சாரத்தில் கோளாறுகள் இருப்பின் மோட்டார் ஆப் செய்யப்படுகிறது. மின்சார தடை மற்றும் நேரடியாக மோட்டார் ஆன்/ ஆப் செய்யப்படும் பொழுது குறுந்தகவல் மூலம் தகவலை அறிந்து கொள்ளலாம். இதனை 0.5 hp முதல்  50 hp வரையிலான மோட்டர்களில் பொருதிக் கொள்ளலாம்.

உணவு கழிவுலிருந்து தயாரிக்கப்படும் பயோ-காஸ்:







தினசரி நமது இல்லங்களில் மீதமாகும் சாப்பாடு - காய்கறிகள் - பழங்கள் - மாமிசங்கள் போன்ற அனைத்து கழிவுகளையும் கொண்டு பயோ-மேதணிசேசன் என்ற முறையில் பயோ-காஸ் உருவாக்கபடுகிறது. இதை எல்.பி.ஜி. -ஐ போன்று சமையல் எரிவாயுவாக உபயோகிக்க முடியும். தினசரி எல்.பி.ஜி. உபயோகத்தை  குறைப்பதுடன் பணமும் மீதமாகிறது, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்கமுடிகிறது...! மேலும், இதன் சிறப்பம்சங்கள்: மாதந்திர எல்.பி.ஜி. உபயோகத்தில் 100% வரை சேமிக்கலாம். வீட்டின் மாடியிலோ, பக்கவாட்டிலோ வைத்துக்கொள்ளலாம். பராமரிப்பு இல்லாத உபகரணம். எவ்வித துர்நாற்றமும் இருக்காது. மிகவும் பாதுகாப்பனது. நாள் ஒன்றுக்கு 3-4 மணிநேரம் பயன்படுத்தலாம். ஹோட்டல், காலேஜ், தொழிற்சாலை கேண்டீன்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து செய்து தரப்படும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...