கோவையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம்

கோவையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெகு காய்ச்சலுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக நிலவேம்பு கஷாயம் உள்ளது. தற்போது நிலவேம்பு கஷாயம் பொதுமக்களுக்கு வழங்குவது கோவையில் ஒருசில பகுதிகளில் துவங்கியுள்ளது. 



உக்கடம் தெற்கு பகுதியில் உள்ள பிலால் நகர், பொன்விழா நகர், அண்ணா நகர், ரோஸ் கார்டன், சாராமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற சங்கம் சார்பில் 86-வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் சாதிக் அலி தலைமையில் வழங்கப்பட்டது.



பருவமழைக் காலங்களில், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்டவயின் அடிப்படையில் பரவும் இதுபோன்ற நோய்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...