குடிநீர் வழங்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் தொடங்க வலியுறுத்தியும், குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் அன்னூர் எம்ஜிசி பாளையம் பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், எம்ஜிசி பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணி துவங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கழிநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உடனடியாக திட்டப் பணியினை துவங்க வேண்டும்.

மேலும், குடியிருப்பு பகுதிக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதுமான அளவு குடிநீர் விநியோகிப்பது இல்லை. இதுகுறித்து அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பிற கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் பெற்றுவரவேண்டியுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்னூர் பகுதீ மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...