அரசை குறை கூறுவதாக கூறி கமலஹாசனின் உருவப்படம் எரிப்பு

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது என்று நடிகர் கமலஹாசன் கூறியதையடுத்து தமிழக அமைச்சர்களும் பல்வேறு அமைப்பினரும் கமலஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.



இந்த நிலையில், தமிழக அரசை ஆதாரமில்லாமல் குறை கூறும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும், தமிழக கலாச்சாரத்தை பாதிக்கும் வகையில் வெளியாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டியும் கோவையில் சக்தி சேனா அமைப்பினர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கமலஹாசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து, அந்த அமைப்பின் மாநில பொது செயலாளர் ஜெகதீசனார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்து மதத்தை பற்றியும் தமிழக அரசு குறித்தும் குறை கூறிவரும் நடிகர் கமலஹாசன் சுய ஒழுக்கம் இல்லாதவர். 'லிவிங் டூ கெதர்' என்கிற கலாச்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாழ்க்கை முறையில் வாழும் கமலஹாசன் அரசாங்கத்தை குறை கூறுவதை ஏற்க முடியாது. 

ஆதாரமில்லாமல் குறை பேசிவரும் கமலஹாசனை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், தமிழக பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதிக்கும் வகையில் கமலஹாசன் நடத்தி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...