வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள புறந்தரதாசர் மண்டபத்தில் வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் விழாவினை துவக்கிவைத்தனர். விழாவில், எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 



விழாவில், முக்கிய நிகழ்வாக முதலில் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் பின்பு நாளைய வரலாறு மற்றும் ஜன்னலில் வெளிவந்த ஆசிரியை பா.பிரபாவதி அவர்களின் குறுநகை பூக்கள் புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் வெளியிட, சமூக ஆர்வலர் இளங்கோ பெற்றுக்கொண்டார். அடுத்தாக சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ரா.கனகராஜ்-யின் காணிக்கை புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை தன்னம்பிக்கை கவிஞர் கவிதாசன் வெளியிட, எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் மற்றும் பெரியமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் இளம் சாதனையாளர்களுக்கான விருதை ஜகதீஷ்க்கு வழங்கப்பட்டது.



விழாவில், சிறப்பு விருந்தினரான எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரமான மருத்துவம், அத்தியாவசியமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையும் உதவவேண்டுமென வந்த அனைவரையும் வியக்கும்படி பேசினார். இறுதியில் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...