கோவையில் துவங்கியது 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா

கொடிசியா நடத்தும் 3-ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துடன் (பபாசி) இணைந்து, கொடிசியா கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்நிலையில், 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாத்தில் துவங்கியது. இதனை அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 



இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், புது தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 170 பதிப்பாளர்கள், 265 அரங்குகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இதில், தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் நேரமாக உள்ளது.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்தேவ்பாய் சர்மா பேசுகையில், ''புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய, இதுபோன்ற கண்காட்சிகள், பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார். கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது,'' என்றார்.



பின்னர், கோவை புத்தக கண்காட்சி சார்பில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, படைப்பாளருக்கான "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. இறுதியில் கொடிசியா துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...