முறையாக குடிநீர் வழங்கக் கோரி கனியூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனியூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்திரா நகர் பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிப்பது இல்லை. தங்களிடம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 8500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. குழாய் இணைப்பும் வழங்கப்பட்டது. 

இருப்பினும், முன்பு தெரு பொதுக்குழாயில் விநியோகிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே நீர் விநியோகம் செய்யப்படுகிறது. தலா ஒரு குடும்பத்திற்கு 10 குடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அவர்கள் அலட்சியமாகவே பதிலளிக்கின்றனர்.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும்". இவ்வாறு அம்மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...