முறையாக குடிநீர் வழங்கக் கோரி கனியூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனியூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையாக குடிநீர் விநியோகிக்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்திரா நகர் பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிப்பது இல்லை. தங்களிடம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக 8500 ரூபாய் வசூலிக்கப்பட்டது. குழாய் இணைப்பும் வழங்கப்பட்டது. 

இருப்பினும், முன்பு தெரு பொதுக்குழாயில் விநியோகிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே நீர் விநியோகம் செய்யப்படுகிறது. தலா ஒரு குடும்பத்திற்கு 10 குடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அவர்கள் அலட்சியமாகவே பதிலளிக்கின்றனர்.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும்". இவ்வாறு அம்மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...