கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைபவர்களிடம் தீவிர சோதனை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆட்சியரிடம் மனு அளிக்க வருவோர் மண்ணெண்னை உள்ளிட்ட எரிபொருட்களை எடுத்துவந்து உடலின் மேல் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருகிறது. 

இதனைத் தவிர்க்கும் வகையில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைபவர்களை கடும் சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர். 



ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அவர்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...