அன்னூர் வட்டத்தில் சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு

அன்னூர் வட்டம், உப்புத் தோட்டம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவு நீர் குட்டையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்புத் தோட்டம் ஆனந்த் தியேட்டர் பின்புறம் வார்டு எண் 3, 13 மற்றும் 14 உள்ள பகுதியில் அன்னூர் நகரப்பகுதியிலிருந்து வரும் சாக்கடை கழிவுகள் தேங்கி குட்டையாக நிரம்பியுள்ளது. மேற்படி இடமானது கோவிலுக்கு சொந்தமான சுமார் மூன்றறை ஏக்கர் நிலமும் அதில் உள்ள கிணறும் சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுகாதார கேட்டினால் பாதிக்கப்பட்டு டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சில மர்மக் காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அன்னூர் பேரூராட்சி மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் கழிவு நீர் குட்டையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...