முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சியைக் கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். அவ்வப்போது சாலை மறியல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இன்று மாலை உழவர் சந்தை அருகே, முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, சிங்காநல்லூர், குறிச்சி, பீளமேடு, சரவணம்பட்டி மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி போன்ற பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது இல்லை. 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு கோவை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.

20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில், மக்களின் எதிர்காலத்தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்கள் கொண்டுவராமலிருக்கிறது ஆளும் அரசு. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...