சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை விமானங்களின் கண்காட்சி

கோவையை அடுத்த சூலூரில் இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது. விமானங்களின் பழுது நீக்கம் மற்றும் விமானிகளுக்கான பயிற்சிகள் இத்தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த தளத்திற்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.



ஆனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வருடத்திற்கு ஒருமுறை சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான கண்காட்சி இன்று ஒருநாள் நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் விமானங்கள், ரேடார் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகியவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் துருவ் ஹெலிகாப்டரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சூலூர் விமானப்படையின் சாரங் பிரிவை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்ததோடு குட்டிக்கரணம் அடித்து சாகசங்கள் நிகழ்த்திய காட்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



இதையடுத்து ஆண்டனோவ் வகையை சேர்ந்த பயணிகள் மற்றும் சரக்கு விமானம் வானத்தில் வட்டமடித்ததை கண்ட பார்வையாளர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். பொதுவாக இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போர்க்காலங்களில் மட்டுமல்லாது இயற்கை பேரிடர்களின் போது பல்வேறு மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தது மாணவ மாணவிகளிடையே வரவேற்பை பெற்றது.



கண்காட்சியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டார்னியர், ஆண்டனோவ், எம்.கே-1 வகை விமானங்கள் மற்றும் துருவ், எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் போர்க்காலங்களில் மட்டுமல்லாது அமைதி காலங்களில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.



கண்காட்சியை பார்வையிட்ட மாணவ மாணவிகள் முதல்முறையாக இந்திய விமானப்படை போர்விமானங்களை பார்வையிட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் விமானப்படையில் இணைய வேண்டும் என்ற தங்களது ஆர்வத்தை இக்கண்காட்சி அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...