சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி

வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் 271 தியாகிகளின் புகைப்படங்கள் உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சிகள் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சிக்கு திருக்குறள் மாமன்றம் மற்றும் மூத்த தொழிநுட்ப அலுவலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.



இது குறித்து வ.உ.சி சேவா அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து கூறுகையில், மூன்றுநாள் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தன் உயிரை நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் அரியவகை புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வகை புகைப்படங்கள் இணையதளங்களில் எளிதில் கிடைப்பதில்லை. திருப்பூர் மற்றும் கோயமுத்தூரில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளை தேடி இவ்வகை புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளோம். மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பார்வையிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.



இதில் வ.உ.சி சேவா அறக்கட்டளை துணைத் தலைவர் ஆனந்த், செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் வ.உ.சி சேவா அறக்கட்டளை முக்கிய செயற்குழு உருப்பினர்கள் மற்றும் கிராமிய கலைகள் ஒருங்கிணைப்பாளர் மோகன்தாஸ், ஈர நெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...