நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியா பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-



பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கிறோம்.

90 சதவிகிதம் அதிகமான மாநில பாடத் திட்டம் மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிலை எடுத்துள்ளோம். மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உலக அளவு தகுதி நிறைந்தவர்களாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மூன்று ஆண்டுகள் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மூன்று ஆண்டுகள் விலக்கு கேட்பதில் அர்தமில்லை.

நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக கருதுகிறேன் என்றார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் வழக்கு தொடர இருப்பதாக நளினி சிதம்பரம் கூறியுள்ளது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, நகைச்சுவை போல காங்கிரஸ் கட்சியினர் மாறி மாறி பேசுகின்றனர். இது அரசியல் சித்து விளையாட்டு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...