இந்தியாவில் இரண்டு சதவிகிதம் மக்களே உடல் உறுப்புகளை தானம் பெறுகின்றனர்- கிஃப்ட் அன் ஆர்கன் திட்ட தலைவர் தகவல்

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உடல் உறுப்புகளுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் காத்திருந்தாலும், அவர்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே நன்கொடையாக உடல் உறுப்புகளை பெற முடிகின்றது என்று சங்கரா கண் மருத்துவமனை நிறுவனரும் கிஃப்ட் அன் ஆர்கன் திட்டத்தின் தலைவருமான மருத்துவர் ஆர்.வி.ரமணி தெரிவித்துள்ளார்.



உறுப்பு நன்கொடை தானம் குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவர் ஆர்.வி.ரமணி, உடல் உறுப்பு தேவைகள் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும், 5550 நோயாளிகள் மட்டுமே தற்போது உறுப்புகளை தானமாக பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், உறுப்பு தானம் குறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது பாராட்டக்குறியது. "கடந்த ஆண்டு மட்டும் 648 உறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.



சிஐஐ கோயம்புத்தூர் மற்றும் ஜெம் மருத்துவமனை பாரியாட்ரிக் கன்சல்டன்ட் மருத்துவர் பி.பிரவீன் ராஜ் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மருத்துவமனைகள் உட்பட 13 மருத்துவமனைகள் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

இதனைத்தொர்ந்து 'கிஃப்ட்டிங் லைப்' என்னும் கருத்தில் நடிகர் மற்றும் எழுத்தாளர் ஆர்.சிவக்குமார் பேசுகையில், தங்கள் உறுப்புகளை நன்கொடையாக வழங்குவதைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று கூறினார். காந்தி மற்றும் காமராஜர் உட்பட பல அறிஞர்கள் நாட்டிற்காக தங்களது வாழ்வையே பரிசாக அளித்துள்ளனர் என சுட்டிக்காட்டினார்.



தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பேசுகையில், நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேவை அதிகரித்துள்ளது. மக்களிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்படும் என்றார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...