மாநகராட்சி ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல உதவி ஆணையர்களுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் மண்டல சுகாதார அலுவலர்களைக் கொண்டு கட்டுமான தளங்கள் மற்றும் காலியாக உள்ள தளங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 28 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக திருச்சி ரோடு, ஏர்போர்ட் ரோடு, நஞ்சுண்டாபுரம் ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையான இடங்களில் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்ற பொருட்களை (பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் கப்புகள்;) உடனடியாக அப்புறப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.

வடக்கு மண்டலத்தில், 4, 27, 41, 29 மற்றும் 55 வார்டுக்குட்பட்ட 25 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக விஸ்வநாதபுரம், முருகன் நகர், சின்னவேடம்பட்டி, மணியம் நகர், எம்.ஜி.ஆர் நகர் இரத்தினபுரி ஆகிய பகுதியில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. 

மத்திய மண்டலத்திற்குட்பட்ட 42 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பி.எம்.சாமி காலனி, ராம் நகர், புளியகுளம், கெம்பட்டி காலனி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். இந்த மண்டலத்தில் முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.2500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 32 கட்டுமான தளங்களில் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ஆய்வு செய்யப்பட்டது. முக்கியமாக பாரதி பார்க், எஸ்.பி.காலனி, அழகேசன் ரோடு, ஜெயலட்சுமி நகர், வெங்கிடகிருஷ்ணா ரோடு, மணியம் காளியப்பன் வீதி போன்ற பகுதிகளில் கட்டுமான தளங்கள் ஆய்வு செய்து, டெங்கு கொசு ஒழிப்பதற்கு தேவையான தடுப்பு முறைகளை உபயோகப்படுத்தினர். மேலும், முந்தய ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்களால் சுட்டிகாட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யாதவர்களுக்கு மொத்தமாக ரூ.6500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தெற்கு மண்டலத்தில் 89-வது வார்டுக்குட்பட்ட மருதம் நகரில் டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...