நாடு முழுவதும் கலைகட்டிய விநாயகர் சதுர்த்தி- கோவில்களில் சிறப்பு பூஜை

தேசிய அளவில் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கோவையில் விநாயகருக்கு என பிரசிதிபெற்ற ஈச்சனாரி மற்றும் புளியகுளம் விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிறப்பு தரிசனத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர். 



மேலும், விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும், எருக்கம் பூவினாலான மாலையும் அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.



இதில் குறிப்பாக, வழக்கம்போல் இரசாயன பூச்சுக்களாலும், பிளாஸ்டிக் கலவையினாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலை அல்லாமல் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளே கோவை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.



மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 'ஜல்லிக்கட்டு விநாயகர்' சிலை தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினரால் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் ஆகஸ்ட் 27 அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளன.



Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....