மாணவி அனிதாவிற்கு நீதிகோரி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதுமுள்ள மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் நியாயமான இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவம் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...