போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் நேற்றிரவு முதல் விடியவிடிய கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழையால் கோவையில் பெருபாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.



கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில் உள்ள கோவை கூட்ஷெட் ரோட்டில் நேற்றிரவு 12 மணியளவில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த சாலையில் திடீரென ராட்சதப் பள்ளமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டிகள் யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை.



முன்னதாக, இப்பகுதியில் ஏற்கனவே சாலை விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பேரிகார்டுகளை மட்டும் அமைத்தது. தொடர்ந்து அந்த சாலையினை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, சாலையின் நடுவே பெரியளவிலான பள்ளம் உருவாகியுள்ளதால் மேலும் இது பெரிதாமல் இருக்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...