போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில் திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் நேற்றிரவு முதல் விடியவிடிய கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழையால் கோவையில் பெருபாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பாதாள சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.



கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் அருகில் உள்ள கோவை கூட்ஷெட் ரோட்டில் நேற்றிரவு 12 மணியளவில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, அந்த சாலையில் திடீரென ராட்சதப் பள்ளமும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வாகன ஓட்டிகள் யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை.



முன்னதாக, இப்பகுதியில் ஏற்கனவே சாலை விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பேரிகார்டுகளை மட்டும் அமைத்தது. தொடர்ந்து அந்த சாலையினை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தற்போது, சாலையின் நடுவே பெரியளவிலான பள்ளம் உருவாகியுள்ளதால் மேலும் இது பெரிதாமல் இருக்க மாநகராட்சி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...