கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளரும், லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர். சமூக அவலங்கள் குறித்து எழுதிய லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, கோவையில் இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து, செய்தியாளர்களிடையே தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் ஆசிரியர் கண்ணன் பேசுகையில், 'மதச்சார்பற்ற கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்த கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியது. அவர் விட்டுச்சென்ற பேனாவை மற்ற பத்திரிகையாளர்கள் தாங்கிப்பிடிப்பார்கள்.

வகுப்புவாதம் பேசுபவர்கள் கருத்தியல் ரீதியாக மோதாமல், ஆயுதங்களை கொண்டு கொலை செய்வது ஏற்க முடியாத ஒன்று. இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்போக்கு எழுத்துக்கள் என்றும் அடிபணியாது. எங்கள் பேனாவை வலிமையான ஆயுதமாக எடுத்து தொடர்ந்து மதவெறிக்கு எதிரான கருத்துக்களை எழுதுவோம்' என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...