ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் ஆளுநரை சந்தித்தார் டிடிவி தினகரன் - முதலமைச்சரை மாற்றக் கோரிக்கை.

தினகரன் அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால், அதன் மீது ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஆதரவை திரும்பப் பெற்ற எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர, 18 பேர் புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் புதுச்சேரி சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே, மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்தனர். இடைப்பட்ட காலத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர். 

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று (செப்.,7) ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு இருந்தனர். ஆளுநர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காரில் சென்னை அழைத்து வரப்பட்டனர். 

சென்னையில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அவர்கள், ஆளுநரை சந்திப்பதற்காக புறப்பட்டனர். 12.45 மணியளவில் தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆளுநரை சந்தித்தனர். அப்போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை விளக்கியதுடன், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....