ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் ஆளுநரை சந்தித்தார் டிடிவி தினகரன் - முதலமைச்சரை மாற்றக் கோரிக்கை.

தினகரன் அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால், அதன் மீது ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுக்கவில்லை. 

ஆதரவை திரும்பப் பெற்ற எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர, 18 பேர் புதுச்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் புதுச்சேரி சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இதனிடையே, மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்தனர். இடைப்பட்ட காலத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர். 

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று (செப்.,7) ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டு இருந்தனர். ஆளுநர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காரில் சென்னை அழைத்து வரப்பட்டனர். 

சென்னையில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த அவர்கள், ஆளுநரை சந்திப்பதற்காக புறப்பட்டனர். 12.45 மணியளவில் தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆளுநரை சந்தித்தனர். அப்போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை விளக்கியதுடன், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...