கோவையில் 3-வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



இந்நிலையில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் 1000 -க்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 



போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில செயலாளர் செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், " பழைய ஒய்வூதியம் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வுக்கு முழு விளக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்.



நாளை (12.09,2017) ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், புதன்கிழமை திட்டமிட்டப்படி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். மாநில அரசு உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார். 

அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக 90 சதவிகிதம் அரசு துறை சார்ந்த பணிகள் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...