கோவையில் 3-வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 



இந்நிலையில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் 1000 -க்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 



போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில செயலாளர் செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், " பழைய ஒய்வூதியம் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வுக்கு முழு விளக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும்.



நாளை (12.09,2017) ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டமும், புதன்கிழமை திட்டமிட்டப்படி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். மாநில அரசு உடனடியாக தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்". இவ்வாறு அவர் கூறினார். 

அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக 90 சதவிகிதம் அரசு துறை சார்ந்த பணிகள் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...